புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக உஜ்ஜால் புயான் மற்றும் வெங்கடநாராயணா பாட்டி ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவெங்கட நாராயணபட்டி ஆகியோரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு கடந்த 5ம் தேதி கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து 12ம் தேதி ஒன்றிய அரசும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக உஜ்ஜல் புயான் மற்றும் வெங்கட நாராயணபட்டி ஆகிய இரண்டு பேரும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
உச்சநீதிமன்ற 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
previous post