டெல்லி: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிப்பிள் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலையில் பாதிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட யூ டியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.