பண மோசடி வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்ற நிலையில், இது போன்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் விகிதம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் சவுமியா ஏற்கனவே 1 ஆண்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உரிய குற்றச்சாட்டுகள் இன்றி ஒருவரை எத்தனை காலம் சிறையில் அடைக்க முடியும் என காட்டமாக கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை வழக்குகளில் குறைந்த அளவிலேயே தண்டனை நிறைவேற்று இருப்பதை சுட்டி காட்டிய அவர்கள், நாடாளுமன்ற தரவுகளின் வெறும் 41 பண மோசடி வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் வருட கணக்கில் சிறையில் வைக்க அமலாக்கத்துறை வலியுறுத்துவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.