சென்னை: உச்சநீதிமன்றத்தின் ஆணை, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது அடக்கி வாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது. மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க ஆளுநருக்கு வீட்டோ பவர் அரசமைப்பு சட்டப்படி கிடையாது என்று அவர் கூறினார்.