இந்தியாவின் ஜனநாயகம், பன்முக கலாசாரம், அரசியல் சட்டத்தின் மாண்புகள், சமூக நல்லிணக்கம் இவை எல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை மனித நேய ஜனநாயக கட்சி இதனை ஒரு அரசியல் களமாக பார்க்கவில்லை. மாறாக ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வோம்.