இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மிரட்டல் விடுத்த நபர், பிரபல ரவுடி விக்கி என்பதும் ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் உருட்டுக்கட்டையுடன் சுற்றித்திரிந்த ரவுடி விக்கியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கடைக்குள் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் திட்டியது உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.