சென்னை: தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.