இந்த நிலையில்,நாசா மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில்,
‘‘ சோதனை விண்கலத்தைப் பொறுத்தவரை பாதுகாப்பானதும் அல்ல, அதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதும் அல்ல. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். கொலம்பியா விண்கலம் விபத்து எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அதனால் வரும் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ்சின் டிராகன் விண்கலம் இரண்டு விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் யாருமின்றி அடுத்த மாதம் பூமி திரும்பும்.