இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சத்யசாய் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராந்தகம் நகர செயலாளர் குமார் அனைவரும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று மதுராந்தகம் அரசினர் மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நகர மன்ற துணைத்தலைவர் சிவலிங்கம, பேரூராட்சித் தலைவர் தசரதன், மதுராந்தகம் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் நூருல் அமீத், ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், ஆறுமுகம், திருஞானசெல்வம், சக்தி குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மதுராந்தகம் நகர திமுக சார்பில் நடைபெற்ற இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு 46 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டி ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நெட்ரம்பாக்கம், கொள்ளம்பாக்கம், சரவம்பாக்கம், முதுகரை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. இதில், திமுக கட்சி கொடியினை ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரபாணி, சுமித்ரா தேவி, குமார், சிகாமணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.