சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது: ஜெய்ராம் ரமேஷ் டிவீட்

டெல்லி: சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா -எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் மையத்தில் இருந்து ஆதித்யா -எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலமான ஆதித்யா -எல்1 PSLV C-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா -எல்1 விண்கலம் வெற்றிகரமாக வின்னி செலுத்தப்பட்டதுக்கு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்; 2006 முதல் 2023 வரை ஆதித்யா திட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துரைக்க வேண்டியது கடமை. ஆதித்யா எல்-1 திட்டம் தொடர்பாக 2008 மார்ச் மாதம் விஞ்ஞானிகள் இஸ்ரோவுக்கு பரிந்துரைகளை வழங்கினர். 2013 ஜூன் மாதம் ஆதித்யா-1 என பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயர் தற்போது ஆதித்யா எல்-1 என மாற்றம் செய்யப்பட்டது. வெற்றிகரமாக ஆதித்யா விண்கலத்தை ஏவி இஸ்ரோ. மற்றுமொரு சாதனை படைத்துள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்