கடந்த 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். இந்த போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டுமென்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. எனவே உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை தொடர்ந்து நாளை ஆஸ்திரியா நாட்டிற்கு மோடி செல்கிறார். 40 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கு இந்திய பிரதமர் செல்ல இருப்பது இதுவே முதல் முறை. இதனால் இப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்த ஆஸ்திரிய பிரதமர் நெஹம்மருக்கு பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.