இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.
வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை செயல்படாமல் விடுமுறை தினமாக தான் இருக்கும். இந்நிலையில் நாளை (ஜூன் 04) பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நாளை 04.06.2024 (செவ்வாய்கிழமை) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.