கிராமங்களில் வீடுகள்முன் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை உடைத்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொண்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கோடை மழை பெய்தது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. தொடர் மழையால் காட்டுத் தீ அபாயமும் குறைந்தது. முதுமலை வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான நீராதார பகுதிகளான குளம், குட்டைகளில் தண்ணீர் நிறைந்துள்ளதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.