சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.