கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்குது போகன் வில்லா

*சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் கோடை சீசனை வரவேற்கும்விதமாக பூத்துள்ள போகன் வில்லா மலர்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இதனை வரவேற்கும்விதமாக போகன் வில்லா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. போகன் வில்லா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மரம் முழுவதும் ரோஸ் நிறத்தில் பூத்து குலுங்குவதால் இலைகளை இல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகவும் காட்சி தருகிறது.

கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் போகன் வில்லா மலர்கள் தற்போது பூத்து குலுங்க துவங்கியுள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த மலர்கள் மே மாதம் வரை பூத்து குலுங்கும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது