கோடை வெயில் ஜார்க்கண்டில் பள்ளி திறப்பு ஜூன் 14 வரை ஒத்திவைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாள்தோறும் 38 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அடுத்த 5 நாட்களுக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது நாளை மறுதினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அம்மாநில பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை செயலர் ரவிக்குமார் வெளியிட்ட உத்தரவில் , ‘’கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகள் ஜூன் 12 முதல் 14 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு