மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை: கரும்பு ஜூஸ் வியாபாரி கைது

பல்லாவரம்: பல்லாவரம் அருகே மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கரும்பு ஜூஸ் வியாபாரியை, போலீசார் கைது செய்தனர். அனகாபுத்தூர், பேட்டை தெருவை சேர்ந்த பாஸ்கர் (58). அதே பகுதியில், கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே வசித்து வரும் 9ம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமியை, மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி தனியாக அழைத்துச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி பயத்தில் கூச்சலிடவே, திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஸ்கரை பிடித்து, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்