இதன் காரணமாக வடமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு குவிந்து வருகின்றனர். மேலும் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை தான் பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதால் பல துறைகளில் வேலை ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தில் கரும்புகடை ஒன்றில் வைத்துள்ள பேனரில் கரும்பு சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை, சம்பளம் ரூ.18ஆயிரம், வேலை நேரம் காலை 8.30 முதல் இரவு 9.30 மணி வரை, கல்வி தகுதி பிஇ, பிஏ, பிஎஸ்சி, வயது வரம்பு 25 முதல் 40 வரை என தொடர்பு எண் அளித்துள்ளனர். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.