அவதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி இரவு நல்ல மழை பெய்தது. அதன் பின்பு கடந்த ஒன்றரை மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. நண்பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் மதியம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை பகுதியில் அரை மணிநேரம் நல்ல மழை பெய்தது. ஆனால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்றியுள்ள பகுதியில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் மக்கள் தவிப்பிற்குள்ளாகினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு