இதுகுறித்து தண்டையார்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மற்ற கார்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டனர். ஆனாலும் அருகில் இருந்த ஒரு காரில் லேசாக தீ பற்றியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.