மாட்ரிட்: வெற்றிகரமான எனது ஸ்பெயின் நாட்டு பயணம் இன்றுடன் நிறைவடைகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டு சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார். ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். கடந்த 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள முதல்வர்; வெற்றிகரமான எனது ஸ்பெயின் நாட்டு பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் நிறுவனங்களிடம் தமிழ்நாட்டில் |கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான மேப்ட்ரீயுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டு மக்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்