Sunday, June 30, 2024
Home » கவரைப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயில் என்ஜின் பழுது: பயணிகள் அவதி

கவரைப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயில் என்ஜின் பழுது: பயணிகள் அவதி

by Dhanush Kumar

திருவள்ளுர்: கவரைப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயில் என்ஜின் பழுது ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்திர குண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் என்ஜின் பழுது ஏற்பட்டதன் காரணமாக தற்போது சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சுமார் ஒருமணி நேரம் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநில சித்திர குண்டாவில் இருந்து புறநகர் ரயிலானது சித்திர குண்டாவில் இருந்து சென்னைக்கு விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இன்று காலை சித்திர குண்டாவில் இருந்து கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களை தாண்டி சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் பொழுது கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே என்ஜின் ஏற்பட்ட கோளாறு காரணங்க அந்த ரயிலானது அங்கேயே நிறுத்தப்பட்டது இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அங்கங்கே கும்மிடிப்பூண்டிக்கு பின்னல் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த புறநகர் மின்சார ரயிலில் என்ஜினில் ஏற்பட்ட பழுது சிறிது சிறிதாக சரிசெய்யப்பட்டு கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே இருந்து அந்த புறநகர் ரயிலானது மெதுவாக இயக்கப்பட்டு பொன்னேரி ரயில் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னேரி ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய மாற்றுப்பாதையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்களும் புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன, தொடர்ச்சியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவது, இதன் காரணமாக புறநகர் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நேற்று பொன்னேரி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ரயில் தடம்புரண்டது, இதன் காரணமாக புறநகர் ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது, இரண்டாவது நாளாக இன்றும் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறநகர் ரயில் சேவையானது ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருப்பதால், அலுவலகம் செல்பவர்கள், பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் என அணைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தை 4 வழி தடமாக மாற்றி ரயில் குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் ரயில் பயணிகள் முன்வைத்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

twelve + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi