Saturday, June 29, 2024
Home » தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

by Ranjith

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று பட்டு வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

* தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.24 கோடி 73 லட்சத்து 13 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* 6500 ஏக்கரில் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 7 கூடிய 83 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* பட்டுக் கூடுகளின் தரம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடி 80 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.

* பட்டுப்புழு வளர்ப்பில் 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு நோய் தடுப்பு மருந்து பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டு வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

* 250 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் ட்ல்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவி அளித்திட நாற்பது ஏக்கர் பரப்பில் கிசான் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு செய்து விநியோகம் செய்திட ரூ.39 லட்சம் மதிப்பில் மூன்று பெரிய அளவிலான இளம் முழு வளர்ப்பு மையங்கள் அமைக்க மாநில அரசு நிதியாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்படும்.

* மாநிலத்தின் பட்டு நுறுப்பு பிரிவை மேம்படுத்தும் விதமாக கூடுதலாக பட்டு நோக்கு அலகுகள் ரூ.3 கோடியே 45 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் நிறுவிட மாநில அரசு நிதியாக ரூ.86 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்
படும்.

* தர்மபுரி மாவட்டத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்கப்படும்.

* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைக்கட்டி பாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பட்டுக்கூடு அங்காடிவளாக ரூ.2 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கோடு உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

five − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi