சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், அன்றாட வேளாண் பணிகளில் பயன்படுத்தும் விதமாக கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் கதிர் அரிவாள் போன்ற வேளாண் கருவிகளை வழங்குவதன் மூலமாக வேளாண் பணிச்சுமை குறைக்கப்பட்டு செயல் திறன் அதிகரித்து வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.
கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் கதிர் அரிவாள் ஆகிய வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்பு பொதுப்பிரிவு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடிமின சிறு குறு விவசாயிகளுக்கும், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சமாக தொகுப்பு ஒன்றிற்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது அபிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து தகவல் பெற தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.