இந்த பணத்தை எடுப்பதற்காக ஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களிலும், வங்கி கிளைகளிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பலியாப்பால் என்ற இடத்தில் மாடி மீது இருந்த இந்தியன் வங்கி கிளையில் பணம் எடுக்க படிக்கட்டுகளில் ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் ஆபத்தான நிலையில் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாப்பூரை போன்று பல மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டனர். சுபத்ரா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் பலரிடம் டெபிட் கார்ட் இல்லாததால் பணத்தை எடுக்க வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.