சென்னை: படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற அசுரன் பட வசனத்தை குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசினார். பொதுத்தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும் எனது வணக்கம். பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன். நான் படிக்கும்போது ஒரு சுமாரான மாணவராகதான் இருந்தேன்; எனது கனவு சினிமாவாகதான் இருந்தது. வருங்கால இந்தியாவின் எதிர்கால சக்திகளாகிய மாணவர்களை காண்பதில் மகிழ்ச்சி என்று நடிகர் விஜய் கூறினார்.