இதுகுறித்து இவர்களது பெற்றோர் பூயப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தேவநந்தா மற்றும் ஷெபின் ஷாவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள சாஸ்தாம்கோட்டை தடாகத்தில் தேவநந்தா மற்றும் ஷெபின் ஷா ஆகிய இருவரும் சடலமாக மிதந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவநந்தாவும், ஷெபின் ஷாவும் அங்கு சென்றபோது தவறுதலாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்களா? அல்லது தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.