2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள் நாகரிகம், கல்வியறிவு, விவசாயம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்த இடத்தை நேரில் கண்டு வியந்தனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், ‘‘ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றை மிஞ்சும் வகையில் இங்கு மனிதர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். திறந்தவெளி அருங்காட்சியகத்தில் இதனை காணும்போது ஆச்சர்யமாக உள்ளது’’ என்றனர்.