இதில் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘பஸ்சில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்வார்கள். அங்கு ஏற்படும் சிறு பிரச்னை சமூதாய பிரச்னையாகவும் உருவெடுக்கலாம். அதனால் பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டாலும் சரி அல்லது சந்தேக நபர்கள் பஸ்சில் ஏறினாலும் சரி உடனடியாக காவல் துறைக்கு தெரிவியுங்கள்.
பஸ்சில் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும். அடாவடி செய்வர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சில தனியார் பஸ்களில் சாதி மோதலை தூண்டும் வகையிலான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இனிமேல் அது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஈடுபடுவது தெரிய வந்தால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.