வளையமாதேவி அடுத்த பனந்தோப்பு பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் ஆசிரியை சுமதி மற்றும் 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.அப்பகுதியினர் வந்து அனைவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.