மாணவி கணக்கில் இருந்து திருடுபோன ரூ.3 லட்சத்தை திருப்பி தர பேடிஎம்-க்கு உத்தரவிடும்படி ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மாணவி கணக்கில் இருந்து திருடுபோன ரூ.3லட்சத்தை திருப்பி தர பேடிஎம்-க்கு உத்தரவிடும்படி ஆர்பிஐக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் மாணவி பவித்ரா பணத்தை திரும்ப அளிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து காணாமல்போகவில்லை; பேடிஎம் கணக்கில் இருந்து காணாமல் போனது என வங்கி தரப்பு கூறியுள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணப் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளருக்கு தெரியாமலோ (அ) வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பரிவர்த்தனை நடைபெறாது எனவும் பேடிஎம் கூறியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி