இதையடுத்து அங்குள்ள திருமலைராஜன் ஆற்றங்கரைக்கு தேடி சென்ற போது, அங்கு புதர் ஒன்றில் மகன் அரவிந்த் சீருடை முழுவதும் நனைந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். அருகில் இளவரசன் ஆற்றில் குளித்துவிட்டு தனது கைலி, சட்டைகளை காய வைத்து கொண்டிருந்தார்.
தகலறிந்து வந்த போலீசார் இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் படித்துள்ள இளவரசன், தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதும் தெரிய வந்தது. கொலையான அரவிந்தை எதற்காக ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றார் என்று விசாரித்து வருகின்றனர்.