இந்நிலையில், ராஜசேகர் வேலைக்கு செல்வது வீட்டிற்கு தெரிந்த நிலையில், தந்தை முரளி மகனை கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்ட ராஜசேகர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மாணவனின் தாய் சசிகலா, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.