இதில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு வெங்கல் பள்ளிக்கு 208 சைக்கிள், குருவாயல் பள்ளிக்கு 113 சைக்கிள் என மொத்தம் 339 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா பன், திமுக ஒன்றிய நிர்வாகிகள் லோகநாதன், டேவிட், ரஜினி, நாராயணசாமி, சுப்பிரமணி, துணைத்தலைவர் சண்முகம், அண்ணாமலை, ஜெகன், ராஜேஷ், செல்வம், ஆரா சுரேஷ், தமிழ் மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் துணை தலைமையாசிரியர் பரமானந்தம் நன்றி கூறினார்.
இதேபோல், வெள்ளியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஆனந்தி தலைமை தாங்கினார். திருவள்ளூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்கத்துல்லா, மாவட்ட கவுன்சிலர் தென்னவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தசரதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு 75 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இறுதியில் உதவி தலைமையாசிரியர் ஜெபசெல்வின் நன்றி கூறினார்.