மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: செய்யூர் எம்எல்ஏ வழங்கினார்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டினம் மற்றும் வெங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா அந்தந்த பள்ளிகளின் வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.டி.அரசு தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு இரு பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ-மாணவிகளுக் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எடையாத்தூர் சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து மற்றும் விசிக நிர்வாகிகள் நத்தமேடு ஏழுமலை, வேலு பிரபாகரன், தயாளன், ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…