மாரடைப்பால் மாணவி சுருண்டு விழுந்து பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனா. மனைவி சுமா. இந்த தம்பதிக்கு சிருஷ்டி (13) என்ற மகள் இருந்தார். இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு நடந்து சென்றார். தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிருஷ்டியை மீட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி இறந்து விட்டதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்