மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ரவுடி கைது

பெரம்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி செல்வ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், வீட்டு வாசலை மாணவி பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது போதையில் அந்த வழியாக வந்த மர்ம நபர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து, வாயை கையால் மூடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் அண்ணன் வந்து பார்த்துபோது அந்த நபர் சிறுமையை விட்டுவிட்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து சிறுமி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓட்டேரி சந்தியப்பன் 3வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் (21) என்பவர் போதையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வசந்தகுமார் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து அயனாவரம் மகளிர் போலீசார் வசந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை