இதேபோல் அடிக்கடி அந்த மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர், மாணவியிடம் கேட்டபோது, தன்னிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டது பற்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.