மிரட்டலுக்கு பயந்த சிறுமி பல மாதங்களாக இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார். நாளுக்கு நாள் மோகனனின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து சிறுமி தன்னுடைய தந்தையிடம் சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து சீதத்தோடு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் மோகனனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்தனம்திட்டா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோகனனுக்கு 55 வருடம் கடுங்காவல் சிறையும், ₹2.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.