பொள்ளாச்சி, ஏப். 24: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த 15 வயது மாணவி, பொள்ளாச்சியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வசந்தகுமார் (22) என்பவர், அந்த மாணவியிடம், காதலிப்பதாக பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த மாணவி மீண்டும் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வசந்தகுமார், மாணவியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார், வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.