இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மாரியப்பன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ₹35 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பு கூறினார்.