மதுரை: மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.