இந்நிலையில், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து நாளை முதல் தங்கள் போராட்டத்தை ஓரளவுக்கு நிறுத்திக் கொள்வதாக ஜூனியர் டாக்டர்கள் நேற்றிரவு அறிவித்தனர். சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பாக நடக்கும் உள்ளிருப்பு போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்ளும் டாக்டர்கள், நாளை முதல் அவசரகால மருத்துவ பணிகள் மற்றும் வெள்ள பாதிப்பு மருத்துவ பணிகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
ஒருவாரத்தில் தங்களின் அனைத்து கோரிக்கையையும் மம்தா அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை புறநோயாளிகள் பிரிவில் பணியாற்ற மாட்டோம் என்றும் கூறி உள்ளனர். இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷின் மருத்துவ பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.