பலத்த காற்று எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

 

அறந்தாங்கி,நவ.15: பலத்த காற்று வீசும் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க போக வேண்டாம். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீன் பிடி துறைமுகங்களான கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்களை பகுதிகள் வெறிச்சோடின. படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை