சென்னை: காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக வதந்தி பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரித்துள்ளனர். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோவை தற்போது நடந்ததுபோல் சமூக ஊடகங்களில் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.