பெங்களூரு: 25 பாஜ எம்.எல்.ஏக்கள் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 10 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராகவுள்ளதாகவும், கூடிய விரைவில் காங்கிரஸ் கட்சியின் பலம் 170 எம்.எல்.ஏக்களாக உயரும் என்றும் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: எதிர்க்கட்சிகளாக பாஜ – மஜத தோல்வியடைந்துவிட்டன. சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியை பாஜ மற்றும் மஜத கட்சிகளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. பாஜவிலிருந்து 20க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 10 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக இருக்கின்றனர். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 160-170 எம்.எல்.ஏக்களாக உயரும். காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு எம்.எல்.ஏவை பாஜ வாங்க முயன்றால், பாஜவிலிருந்து 25 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.