சென்னை: புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய அரசின் குழு நாளை மறுநாள் சந்திக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்கின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட ஒன்றிய அரசின் குழு சென்னை வந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒன்றியக்குழு ஆய்வு செய்கிறது.