இதன் காரணமாக பட்டாளம் அங்களாம்மன் கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பட்டாளம் பகுதியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்படுவதை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பம்பிங் அறை, டிம்லர்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மின் மோட்டார்கள் இயங்கும் இடங்கள் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதிக மழை பெய்தால் குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மின் மோட்டார்களின் இயக்கம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மத்திய வட்டார அலுவலர் பிரதீப் குமார், திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.