மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டுமென்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பாஜவை காப்பாற்றுகிற முயற்சியாகும். எனவே, ஒன்றிய பாஜ அரசு 2021ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மோடி அரசை வலியுறுத்த விரும்புகிறேன்.