இந்தத் தவணை அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடி, ஆந்திராவுக்கு ரூ.2,952.74 கோடி, கேரளாவுக்கு ரூ.1,404.50 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.1,533.64 கோடி, குஜராத்துக்கு ரூ.2,537.59 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.2,660.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு வரி வருவாய் பெருமளவில் குறைந்து விட்டது. இதனால், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் வரிப்பகிர்வு, மாநில நிதித் தேவைக்கு அத்தியாவசியமாக உள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக வழங்கப்படுகிறது. மாநிலங்களின் மக்கள் தொகை, காடுகளின் பரப்பளவு, தனிநபர் வருவாய் ஆகியவற்றுக்கு ஏற்ப இது கணக்கிடப்படுகிறது.